Tuesday, June 2, 2009

86வது அகவையில் காலடி வைத்திருக்கும் தமிழனத்தலைவர் திரு. மு. கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


உலகத்திலே 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து கின்னஸ் சாதனை பெற்ற தமிழனத்தலைவன் திரு.மு. கருணாநிதி அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழினத்தலைவர் அவர்களின் உண்ணாவிரதம் காரணமாக சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய யுத்தத்தை நிறுத்தியதாக தமிழினத்தலைவரின் ஊடகங்கள் (சன், கலைஞர், தினகரன், முரசொலி) செய்தி வெளியிட்டது தெரிந்ததே. இதை நம்பி தமிழ் நாட்டு மக்கள், சிறிலங்கா அரசுக்கு ஆயூத உதவிகளைச் செய்து, ஈழத்தமிழர்களையும், அப்பாவித் தமிழக மீனவர்களையும் கொலை செய்யக் காரணமாக இருந்த காங்கிரசுக் கூட்டணியை தமிழ் நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 28 இடங்களில் வெற்றி பெற வைத்து மீண்டும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவு தந்ததும் தெரிந்ததே.

பி.கு - உண்ணாவிரதம் முடிந்தபின்பு தான் அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.