Tuesday, June 2, 2009

86வது அகவையில் காலடி வைத்திருக்கும் தமிழனத்தலைவர் திரு. மு. கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


உலகத்திலே 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து கின்னஸ் சாதனை பெற்ற தமிழனத்தலைவன் திரு.மு. கருணாநிதி அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழினத்தலைவர் அவர்களின் உண்ணாவிரதம் காரணமாக சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய யுத்தத்தை நிறுத்தியதாக தமிழினத்தலைவரின் ஊடகங்கள் (சன், கலைஞர், தினகரன், முரசொலி) செய்தி வெளியிட்டது தெரிந்ததே. இதை நம்பி தமிழ் நாட்டு மக்கள், சிறிலங்கா அரசுக்கு ஆயூத உதவிகளைச் செய்து, ஈழத்தமிழர்களையும், அப்பாவித் தமிழக மீனவர்களையும் கொலை செய்யக் காரணமாக இருந்த காங்கிரசுக் கூட்டணியை தமிழ் நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 28 இடங்களில் வெற்றி பெற வைத்து மீண்டும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவு தந்ததும் தெரிந்ததே.

பி.கு - உண்ணாவிரதம் முடிந்தபின்பு தான் அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

Monday, May 25, 2009

காந்தி தேசமே! இது நீதியா?

வன்னியில் ஏற்பட்ட பேரழிவுக் கொடூரங்களினால் துடித்துப் போய்க் கலங்கி நிற்கின்றது தமிழினம்.

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற அவலம் ஒருபுறம். அநீதி இழைத்த தரப்புக்களைத் தட்டிக் யேட்க வக்கில்லாமல் மௌனித்திருக்கும் சர்வதேசம் குறித்து மறுபுறம் பெருவிசனம். வெஞ்சினம் மனதுக்குள் குமுறுகின்றது. துன்ப துயரங்களோடு அதனையும் சகித்துப் பார்த்திருப்பதைத் தவிர தமிழினத்துக்கு வேறு மார்க்கம் என்னதான் உண்டு?

ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத் தின் பேரில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமையைப் பார்த்தி ருக்க மாட்டோம் என்றும்
மக்களைக் கொன்றொழிக்கக் காரணமானோர் சர்வ தேசச் சட்டங்களின் விசாரணைகளில் இருந்து தப்பிப் பிழைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும்
ஒரு செய்தியை ஆறுதல் தகவலை இப்போது சர்வ தேசம் கூற முற்படுவதாகத் தெரியவருகின்றது.

இலங்கை யுத்தத்தில் இடம்பெற்றவை என்று கூறப் படும் போர்க் குற்றங்கள் குறித்து விசேடமான விசாரணை கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரே ரணை ஒன்று நாளை ஜெனீவாவில் நடைபெற விருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசேட கூட்டத்திற்கு வரவிருப்பதாகத் தெரிகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விட யத்தை மனித உரிமைகள் கவுன்ஸிலில் விசேட விவ காரமாக ஆராய்வதற்கான பிரேரணையாகக் கொண்டு வருவதற்குத் தேவைப்படும் மேலும் பதினாறு உறுப்பு நாடுகளின் ஆதரவை இதற்குப் பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,மெக்ஸிக்யோ, மொரிஸியஸ், நெதர்லாந்து, கொரியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா,சுவிட்ஸர்லாந்து, உக்ரைன், உருகுவே போன்ற நாடுகளே அவை.
எனினும், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் மொத்தமாக அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் தனக்கு ஆதரவான தேசங்களை ஒன்று திரட்டி, இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் கவுன்ஸி லின் முன் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியில் கொழும்பும் இறங்கியிருப்பதாகத் தகவல்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலே ஷியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவூதி அரே பியா, எகிப்து, நிக்கராகுவா, பொலீவியா போன்ற தேசங் களே இலங்கைக்காக வரிந்து கட்டிக் கொண்டிருக்கின் றன என்று கூறப்படுகின்றது.
எனினும், இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளை வழிக்குக் கொண்டு வருவதற்குத் தன்வசம் உள்ள ஆயுதம் ஒன்றை அமெரிக்கா கடைசி நேரத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வன்னிக் களத்தில் இறுதி நேர யுத்தம் எவ்வாறு கொடூரமாக குரூரமாக முன்னெடுக்கப்பட்டது என்ப தைத் தனது செய்மதி உளவுத் தகவல்கள் மூலம் மிகத் துல்லியமாகவும், துலாம்பரமாகவும் அமெரிக்கா பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சர்வ தேசப் போரியல் குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படக் கூடிய பல அம்சங்கள் ஆதாரத்தோடு தெளிவாக அவற் றில் அடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை விடயத்தைப் போரியல் குற்ற விசார ணைக்கு உட்படுத்தக் கூடாது என வாதிடும் தேசங் களுக்கு இந்த ஆதாரங்களின் ஒரு பகுதியைக் கடைசி நேரத்தில் அமெரிக்கா கசிய விட்டு விட்டு, இந்த விட யங்கள் குறித்தா விசாரிக்கக் கூடாது என வாதிடுகின் றீர்கள் என அமெரிக்கத் தரப்புக் யேள்வி எழுப்பும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைப் பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கொழும்புக்குத் துணை போனது பாரதம்.

இப்போது, அந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து நடைபெறக் கூடிய சர்வதேசவிசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத் திடம் இருந்து கிடைக்கக்கூடிய நீதிக்கும் வேட்டு வைக்க முயல்கிறது அதே பாரதம்.

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த இழைத்து வருகின்ற இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு முண்டு கொடுத்ததன் மூலம், ஈழத் தமிழர்களுக்கு முதுகில் குத்தும் கொடூரத்துக்குத் துணை போன தமிழக சக்தி களும், கட்சிகளும் இப்போது சர்வதேசவிசாரணைகள் மூலம் ஈழத் தமிழருக்கு நீதி கிடைப்பதை முட்டுக்கட்டை போட்டுத் தடுக்கும் கொடுமையில் இந்தியா ஈடுபடும்போது என்ன செய்யப் போகின்றன?

ஈழத் தமிழர்களின் விடயத்தைப் பொறுத்தவரை பாரதம் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செசாயாமல் இருந்தால் போதும். ஈழ யுத்தத்தில் கொழும் புக்கு நேரடியாகத் துணைபோய், அதன் மூலம் உபத் திரவம் செய்த இந்தியா, இப்போது ஈழத் தமிழர்களுக்கு இறுதியில் நீதி, நியாயம் செய்யக்கூடிய சர்வதேசநீதி மன்ற விசாரணைக்கும் தடைக்கல் போடுவதன் மூலம் தனது உபத்திரவத்தைத் தொடர முயல்கின்றது. காந்தி தேசமே! இது உனக்யே நீதியா?

- உதயன்

Wednesday, May 6, 2009

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்--தமிழருவி மணியன்

உண்ணாவிரதம் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு,அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர் வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்றசெயல். உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது.

அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்...' - என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ். அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன்.

'தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப் பகுதியில் சிங்களர் காவல் நிலையங்கள் கூடாது; வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் இடைக்காலநிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்' என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இராசையா என்ற திலீபன், யாழ்ப்பாணம்நல்லூர்கந்தசாமி கோயில் திடலில் தண்ணீரும் அருந்தாமல் 12 நாள் உண்ணா நிலைப் போர் நடத்தி உயிர்நீத்து, ஈழப் போராளிகளின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தான்.

தமிழகத்தின் ஆட்சி நாற் காலியை அலங்கரிக்கும்கலைஞர், அண்ணா சமாதியில்யாரை எதிர்த்து அரை நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்? 'இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய இந்த உண்ணாநோன்பை மேற் கொண்டிருக்கிறேன்' என்று அவர் அறிவித்ததற்கு என்ன அர்த் தம்? பல்லாயிரம் தமிழர்களை பலிவாங்கிய ராஜபக்ஷே அரசைக் கடுமையான மொழியில் கண்டிக்காமல், புழுக்கத்தோடு புலம்புவதா தமிழகத்தின் உரிமைக்குரல் கொடுக்கும் தனிப்பெரும் தலைவரின் போர்ப் பரணி?

பதினெட்டு முறை உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு முறையும் கோரிக்கை நிறைவேறிய பின்பே அந்த அகிம்சைப் போரை நிறுத்தியவர் அண்ணல் காந்தி. அவரேகூட, 'என்னை நேசித்தவர்களைச் சீர்திருத்தவே நான் உண்ணாநோன்பை மேற்கொண்டேன். என்னை நேசிக்காத, என்னுடைய எதிரியாகக் கருதிய தளபதி ஜெனரல் டயரைச் சீர்திருத்துவதற்கு நான் உண்ணாநோன்பிருக்க மாட் டேன்!' என்றார். ஒருவேளை, கலை ஞரும் ராஜபக்ஷேவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்காமல்... தான் மிக அதிகமாக நேசிக்கும் 'சொக்கத் தங்கம்' சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் சீர்திருத்தும் நோக்கோடுதான் காந்திய வழியில் அரை நாள் தியாகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தாரோ?

இந்த உண்ணாவிரதத்துக்கு பலன் இருக்கும் என்று கலைஞர் முழுமன தாக நம்பியிருப்பாரேயானால்... அதுவும்கூட மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தால்... எத்தனை குழந்தைகள் பிழைத்திருக்கும்... எத்தனை குடும்பங்கள் தழைத் திருக்கும்... எவ்வளவு ஆண்களும் பெண்களும் சாவுப் பள்ளத்தில் சரிந்துவிழாமல் ஈழ நிலத்தில் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்! பாழாய்ப் போன நாடாளுமன்றத் தேர்தல், மூன்று மாதங்களுக்கு முன்பே வந்திருக்கக்கூடாதா?

இதற்கும்தான் எவ்வளவு விளம்பரம்; எத்தனை ஆர்ப்பாட்டம்! புலர்காலைப் பொழுதில் அண்ணா சமாதியில் கலைஞர் தன் உயிரை பலியிடும் முடிவோடு(!) உண்ணாநோன்பில் உட்கார்ந்தார். தொண்டர்கள் கூடினர். தலைவர்கள் திரண்டனர். உண்ணாநோன்பைக் கைவிடும்படி அவர்கள் உயிர் உருகக் கதறியபோதும் கலைஞர் அசைந்து கொடுக்கவில்லையாம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அறிவுறுத்தியபடி கலைஞர் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தார். உண்ணாநோன்பு உக்கிரமான சூழலை நெருங்கியதாம்! ப.சிதம்பரம் தொலைபேசியில் தொடர்புகொண்டாராம். ஆறு மணி நேர உண்ணாநோன்பில் ராஜபக்ஷே அச்சத்தின் மடியில் விழுந்துவிட்டதாகவும், அலறியடித்துப் போரை நிறுத்திவிட்டதாகவும் செய்தி சொன்னாராம். தன் ஆற்றல் முதல்வருக்கு அப்போது உடனே புரிந்துவிட...

படுக்கையிலிருந்து கலைஞர் எழுந்தார். 'இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டது' என்று பிரகடனம் செய்தார். ஈழத் தமிழினம் ஒரு வழியாக உயிர் பிழைத்ததறிந்து அவரைச் சுற்றி வாழ்த்தொலிகள், ஜெய கோஷம்! 'சர்வதேச நாடுகள் சாதிக்க முடியாததை ஒரு தனி மனிதர் சாதித்தார்' என்று 'வீரமணி'களின் புகழாரம்; திருமாக்களின் தேவாரம்! உலக வரலாற்றில் இவ்வளவு விரைவாக எந்த உண்ணாநோன்பும் வெற்றி பெற்றதில்லை. புன்னகையுடன் கலைஞர் கோபாலபுரம் நோக்கி காரில் பறந்தார். உண்ணாநோன்பு 'வெற்றி'க்குப் பின்பு இருபது நிமிடங்களில், முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தின் முப்படைத் தாக்குதல்களில் 272 அப்பாவித் தமிழர் அழிந்துபோயினர். 'தீவிரவாதி களை ஒழிக்கும் செயலில் ராணுவத்துக்கு வெற்றி நெருங்கி வந்திருக்கும் நிலையில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளில் இருந்து ஓயப்போவதில்லை' என்ற ராஜபக்ஷேவின் ஆணவக் குரல் உலகின் காதுகளில் விழுந்தது.

கலைஞரும், 'மழை நின்றுவிட்டது; தூவானம் தொடர்கிறது' என்று கவித்துவத்தோடு பேட்டி கொடுக்கிறார். கொத்துக் குண்டுகளை நம் சொந்த சகோதரர்களின் குடும்பங்கள் மீது தொடர்ந்து வீசுவதை முல்லைத்தீவுப் பகுதியில் செயற்கைக்கோள் மூலம் படமெடுத்து ஐ.நா. சபை வெளியிட்டது. அது கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் குளிர் மழையாகத் தெரிகிறதா? 'ஒருவர் செத்தால் ஊர் சுமக்கும். ஊரே செத்தால் யார் சுமப்பார்...' என்ற அதீத அவலம்!

'கடைசிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாட்டின் சுதந்திரத்தைக் காப்போம்' என்று ஒருவர் சொன்னதும், 'கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்போது ஒருவன் செத்துவிடுவானே. அவனால் எப்படி சுதந்திரத்தைக் காக்க முடியும்?' என்றார் பெர்னார்ட்ஷா. கலைஞர் பேசுகிற அலங்கார வார்த்தைகளும் இந்த வகைதான்.

'மார்க்சிஸ்ட் கட்சியினர் இலங்கை இறையாண் மைக்கு உட்பட்ட அரசியல் தீர்வு அமையவேண்டும் என்கிறார்கள். என் கருத்தும் அதுதான்' என்கிறார், நேற்று தமிழீழம் கேட்டுக் கலிங்கத்துப்பரணி பாடிய கலைஞர்! 'வள்ளித் திருமண' நாடகத்தில் வேலனாக நடிப்பவரே, அடுத்து வேடத்தை மாற்றி விருத்தனாக நடிப்பது போல்... இந்த 'இலங்கேஸ்வரன்' நாடகத்தில் கலைஞர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பார்.

சிங்களம் ஆட்சிமொழி, பௌத்தம் அரச மதம், சிங்களர் மட்டுமே ஆளப் பிறந்தவர் என்று பேசும் காடையர்களோடு தமிழர் கலந்து வாழ்வது சாத்தியமா? சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிறுத்தி... ஓர் இன அழிப்புப் போரை 'பயங்கரவாத அழிப்பு' என்ற போர்வையில் திட்டமிட்டு நடத்தும் சிங்கள மனநோயாளிகளுடன் இனியும் தமிழர், இறையாண்மைக்கு உட்பட்டு இணைந்து வாழக் கூடுமா?! தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசா வாவுக்கும், இந்தோனேஷியாவிலிருந்து விடுபட்ட கிழக்கு தைமூருக்கும் ஒரு நீதி; ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?!

கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு முப்பது லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளிகள் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். ஒரு முகாமில் மட்டும் முப்பதாயிரம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டனர். மனித உரிமைகள் காற்றில் பறந்தன. இந்திய ராணுவம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்திரா காந்தியின் தயவால் புதிய வங்க தேசம் தனி நாடாகப் பிறந்தது. பாகிஸ்தான் இரண்டாகப் பிரிவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. சோனியாவின் வழிகாட்டுதலில் இயங்கும் மன்மோகன் அரசு இந்திய நலனுக்காகவே இலங்கைத் தீவு ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.

ஈழப்பிரச்னை ஓர் இனப் பிரச்னை. ஆனால், அது இங்குள்ள காங்கிரஸ்காரர்களால் பயங்கரவாதப் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி படுகொலையைக் காட்டிப் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? 'சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் செம்மை மறந்த' ப.சிதம்பரம் போன்றவர்கள், 'யார் முத்துக்குமார்?' என்று ஏளனக் குரலில் கேட்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் போன்றவர்கள், ஈழப்பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லும் கே.வி.தங்கபாலுவைப் போன்றவர்கள், தமிழகத் தேர்தல் களத்தில் கலைஞரின் குடைநிழலில் வெற்றிக் கனவுகளோடு நிற்கிறார்கள்!

அவர்கள் கனவை வெற்றுக் கனவாக்க வேண்டியது, தமிழரின் முதற் கடமை. 'ஈழப்பிரச்னையில் கடுகளவு பாதிப்பும் ஏற்படாது!' என்று கட்டியம் கூறும் கலைஞரின் வேட்பாளர்களை விலாசமற்றவர்களாக மாற்றுவது வாக்காளர்களின் இரண்டாவது கடன். இவர்களுக்குத் தரும் தோல்வியின் மூலமே புதுடெல் லிக்கு தமிழனின் உண்மையான உணர்வு, புத்தியை புகட்ட முடியும்.
ரோமாபுரியின் செனட்டராக இருந்த டேசிடஸ், 'A bad peace is even worse than war' என்றதுதான் ப.சிதம்பரத்தின் பேச்சையும், என்றும் மணக்காத கலைஞரின் காகிதப் பூ நாடகக் காட்சிகளையும் காணும்போது நெஞ்சில் நிழலாடுகிறது. வின்ஸ்டன் சர்ச்சில் எதற்கும் நேரடியாக பதிலளித்ததில்லை. ஒருவர் அவரிடம், 'இப்போது மணி என்ன?' என்றார். உடனே சர்ச்சில், 'உங்கள் கடிகாரத்தில் மணி என்ன?' என்று கேட்டார். ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞர், சர்ச்சிலைப் போல் சாமர்த்தியம் காட்டுகிறார். 'ஒரு ராஜதந்திரி தன் அதிகபட்ச ராஜதந்திரத்தாலேயே அழிவைத் தேடிக் கொள்கிறான்' என்பதை, கலைஞருக்கு விரைவில் காலம் கற்றுக் கொடுக்கும்!
- விகடன்

Wednesday, March 25, 2009

எவ்வளவு காலம் காங்கிரஸ் இளங்கோவன் பொய் சொல்லப்போகிறார்?


பிரணாப் முகர்ஜி இலங்கை போன பின்னர்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்ற பொய்யை காங்கிரஸ்காரர்கள் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 48மணித்தியாலம் போர் நிறுத்தம் செய்யவில்லை. மக்கள் வெளியேற 48 மணித்தியால கெடுதான் சிறிலங்கா அரசு அறிவித்தது. அதனை சிங்கள இராணுவம் உறுதி செய்தது.அந்த 48மணித்தியாலத்தில் சிறிலங்காப்படைகளினால் கொல்லப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 100யும் தாண்டும்.

இதோ இளங்கோவனின் பொய்யுரை--

கோபியில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தற்போது சிறு சிறு கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளின் நாடியை பிடித்து பார்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறிய கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றால் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்களுக்குத் தான் நஷ்டம்.

சத்தி-சாம்ராஜ் நகர் ரெயில்வே திட்டப்பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இதற்கான திட்டப்பணி தடைபட்டு கிடக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் பணியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்ற 48 மணி நேரத்துக்கு பின்பு தான் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன் வந்ததது.
பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனைகளையும், தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகள் செய்த சாதனையையும் சொல்லி வாக்கு கேட்போம். திமுக -கங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனறார்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது என்றும் மேலும் பொய்யுரைக்கும் இளங்கோவனின் காங்கிரசு அரசு தான் தமிழர்களைக் கொல்ல நடவடிக்கை எடுக்கிறது. இவரின் பொய்யுரை கேட்க நல்லகாலம் பெரியார் இப்பொழுது உயிருடன் இருக்கவில்லை.

Monday, March 16, 2009

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு வன்னியில் இருந்து ஒரு கண்ணீர் கடிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஒரு ஓரமாக அமர்ந்தது அலப்பறை டீம். மிக முக்கியமான கூட்டம் என்றழைத்த சித்தனைப் பார்த்து, அப்படி என்னப்பா முக்கியமான சேதி? என்று வம்பிழுத்தார் சுவருமுட்டி.

"அது ஒண்ணுமில்லப்பா. தேர்தல் வந்துடுச்சுல்ல. தமிழ்நாடு முழுக்க இலங்கைத் தமிழர்கள் ஆதரவு பத்திக்கிட்டிருக்குல்ல. ஈழத்தமிழ் மக்கள் தினம்தோறும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக்கிட்டிருக்கிறதுக்கு காரணமே காங்கிரசின் மைய அரசுதாங்கிற கோபம் இருக்குல்ல. அத மனசுல வச்சுதான் நாங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டப்போறோம்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு அறிவிச்சிருக்காரு. இப்படியாவது தப்பிடலாங்கிற நப்பாசை. அது தமிழ்நாடு மக்கள்கிட்ட எப்படி எடுபடுதோ தெரியல. ஆனா தங்கபாலுவின் அந்த நிவாரணவசூல் அறிவிப்பு ஈழத்தமிழர் மத்தியில பெரிய ஆதங்கத்தை எழுப்பியிருக்கு. அந்த மக்கள் சார்பான ஒரு கொந்தளிப்பு கடிதம் ஒன்று வன்னியில் இருந்து நமக்கு வந்திருக்கு. வெற்றிகொண்டான் என்கிற பெயரில் எழுதியிருக்காங்க. அத அப்படியே வாசிக்கிறேன் கேளுங்க..." என்று கூறிய சித்தன் வாசிக்கத்தொடங்கினார்.

மதிப்பிற்குரிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு அவர்களே!


வணக்கம்.


உயிரைக் கையில் பிடித்தபடி நாளின் ஏறக்குறைய முழுப்பகுதியையும் பதுங்கு குழிகளுக்குள் உயிர் வற்றிப்போக ஒடுங்கிக்கிடந்து குண்டுச்சத்தமற்ற நாளையின் வரவுக்காக ஏங்கிக் காத்துக்கிடக்கும் உங்கள் இனத்தவன் எழுதுகிறேன். கடந்த ஆண்டின் இறுதியில் தீவிரமடைந்து இந்த ஆண்டு மிகமிக மோசமடைந்து விட்ட 21ம் நூற்றாண்டின் மிக மோசமான மனித அவலம் என்று வர்ணிக்கப்படும் வன்னி அவலத்தின் நேரடிச் சாட்சியம் எழுதுகிறேன்.


என் இனத்தவரே!


எமக்காக நிதி சேகரிக்கிறீர்களாம். சோனியா அம்மையாரின் உத்தரவாம். பதுங்கு குழிக்குள் வாழ்க்கை என்றாலும் அறிந்தோம். அதிர்ந்தோம். சிங்களவனின் கொடிய குண்டைவிட அபாயம் நிறைந்த செய்தி.

இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள். இப்போது எங்கிருக்கிறீர்கள். எம்மீது ஏன் இந்த திடீர் அக்கறை?. எங்களை அவமானப்படுத்தாதீர்கள். தயவு செய்து எங்களை அவமானப்படுத்தாதீர்கள்.

மனசாட்சி ஒன்றிருந்தால் உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். இன்றைய எமது நிலைக்கு யார் காரணம்? உண்மையில் நீங்கள் தமிழனாக இருந்தால், அதையும் தாண்டி இந்தியனாக இருந்தால், அதையும் தாண்டி மனிதனாக இருந்தால், தமிழக மக்களின் இன்றைய அவல நிலைக்கு இந்தியா, குறிப்பாக காங்கிரஸ் கட்சியே முக்கியமான காரணம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். வாய்கூறாவிட்டாலும் மனம் கூறும்.

சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு முண்டுகொடுத்தீர்கள். இன அழிப்பு போருக்கான ஆயுத தளவாடங்களைக் கொடுத்தீர்கள். யுத்த கப்பல்கள் கொடுத்தீர்கள். பயிற்சிகள் கொடுத்தீர்கள். போர் நிபுணத்துவ உதவிகளை செய்தீர்கள். எங்களது விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கான ஆசிகளையும் ஆலோசனைகளையும் அனைத்து விதமான உதவிகளையும் பொளத்த சிங்களப் பேரினவாதப் பேய்களுக்கு செய்தீர்கள். பிளவுகளை ஏற்படுத்தினீர்கள். எம்மைப் பலவீனப்படுத்தினீர்கள். இந்திய நலன் என்ற சிறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சின்னஞ்சிறிய இனமான தமிழீழ தேசிய இனத்தை சிதைத்தீர்கள். கூறுபோட்டீர்கள். மனிதம் தவறிவிட்டீர்கள்.

உலகம் போற்றும் மகாத்மா காந்தியையும், அகிம்சை தத்துவத்தையும் முன்னால் காட்சிக்கு வைத்து விட்டு நீங்கள் எம்மண்ணில் செய்த அக்கிரமங்கள், கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று சிங்கள இனவெறி அரசுக்கு கூட்டாகத் தொடர்கிறீர்கள். அதுசரி. உண்மையில் எங்கள் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதா?

அரை உயிர் பறிக்கப்பட்டு, கூன் குருடு நொண்டிகளாக்கி விட்டு பின் மருந்து தருகிறீர்கள். உடை தருகிறீர்கள். இப்படி ஒரு கொடுமை நடவாமல் தடுப்பதை விட்டு கொடுமையின் விளைவுக்கு ஒத்தடம் போடுகின்றீர்கள். இது நியாயமா?...."


இப்போதாவது காங்கிரஸ் நல்லதை செய்ய முன்வந்திருக்கின்றதே. அதைக்கூட குறைசொன்னால் எப்படீ..?- கோபால்.


"அடடே...அப்படியா. அதற்கும் ஒரு விளக்கம் சூடாகவே தொடர்கிறது கேளுங்கள்..."- சித்தன் தொடர்ந்தார்.


"....உலகை எட்ட வைத்து விட்டு, போரை நடத்துவது நீங்களே என்று சிங்களத் தரப்பே தற்போது கூற ஆரம்பித்துவிட்ட நிலையில், போரை நிறுத்துவதற்கு மட்டும் அது உள்நாட்டுப் பிரச்னை என நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை. இந்தப் பிரச்னையின் ஆணிவேர்வரை உங்கள் கையிருக்கிறதே. மறைக்க முனையாதீர்கள். தற்போது தேர்தல் காலம். தமிழகத்தில் வினைப்பலன் கிடைத்துவிடுமா என்று அஞ்சுகிறீர்கள். அரிதாரம் பூசிக்கொண்டு வேறொரு பாத்திரத்தில் நடிக்க முற்படுகிறீர்கள்.


ஈழத்தமிழருக்காக நிதி சேகரிப்பு!.


எது எங்கள் மரணச் சடங்கிற்கா அரிசி சேகரிக்கிறீர்கள். வாய்க்கரிசிக்கா?

ஈழத்தமிழர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அது உங்களுக்கும் தெரியும். பின் யாரை ஏமாற்ற இந்த வேடம்?

யாரை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் தமிழ் உறவுகளையா? ஏமாற மாட்டார்கள்.

புளித்துப்போன அரசியல் சவடால்கள், பொய்யுரைகள் கேட்டு ஏமாந்த காலம் போயிற்று. இன்று தமிழகத்தில் புதிய இரத்தம். தமிழ் இரத்தம். மானம் கொப்பளித்துப் பாயும் இளரத்தம் ஓடுகிறது. விசயங்களுக்கு இங்கே இடமில்லை.

உண்மைகளைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். கட்சிகளுக்காகவும், கட்சித் தலைவர்களுக்காகவும் உயிரை மாய்த்த காலம் போய் இன்று இனத்துக்காக களமிறங்கியிருக்கும் சிந்தித்துச் செயல்படும் இளந்தமிழர்கள் மத்தியில் உங்கள் நரித்தனங்கள் எடுபடாது. உங்களது காலம் பாழாய்ப்போன பழைய காலம்.

இன்று புதிய மனிதர்கள். புதிய காற்று. அறிவுடை மக்கள். அழகான தமிழகம்.


தங்கபாலு அவர்களே!


கொஞ்சம் தமிழராய் சிந்தித்துப் பாருங்கள். கொஞ்சநேரம் போதும். கண்களை சிறிது மூடி தமிழனாய் சிந்தியுங்கள். புதிய மனிதனாய் பிறப்பீர்கள். எங்கள் அழிவில், தமிழீழ மண்ணில் கொட்டிக்கிடக்கும் எங்கள் குருதியில் துண்டங்களாய் வன்னி எங்கும் சிதறிக்கிடக்கும் எங்கள் குழந்தைகளின் எங்கள் பெண்களின் எங்கள் உறவுகளின் சதைத் துண்டங்களில் உங்களின் கை இருக்கிறது அன்பரே!


தற்போது புதிதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. போர் முடிவடைந்ததும் இலங்கை அரசு இனப்பிரச்னைக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்திருக்கிறாராம்.


போரை நிறுத்துவதில் தலையிட முடியாது. அது உள்நாட்டுப் பிரச்னை என்று கூறி நழுவும் இந்தியா, போர் முடிந்ததும் தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பது பொருத்தப்பாடாய் இல்லை. ஆக..இந்தப் போரை இறுதிவரை தொடர்வதில் உறுதியாக இருக்கிறது இந்தியா. அப்படியானால் எல்லாம் முடிந்தபின் இந்த அரிசி பருப்பு, மருந்து, பணம் என்பனவற்றை சேகரிக்கலாமே? அதுவரை உங்கள் தேர்தல் பொறுத்திருக்காது. அதனால் இப்பொழுதே தொடங்குங்கள். ஆயிரமாயிரமாய் ஓட ஆரம்பித்து நூறாய் சுருங்கி இன்று பத்தாய் துவண்டு கிடக்கிறோம். ஆனால் மண்டியிட மாட்டோம் அன்பரே.


வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு கட்சி அரசியல் நடத்தும் உங்களால் இரத்தச் சகதியில் பிணங்களோடு இன்னும் உயிருள்ள பிணங்களாய்க் கிடக்ம் எங்கள் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. எங்கள் துயரங்களை அறிந்து கொள்ள முடியாது. எங்கள் பிரிவுகளை, எங்கள் அழிவுகளை, எங்கள் அவலங்களை எழுத்தில் தருவதும் முடியாது. புகைப்படங்களைக் காட்டி விளக்குவதற்கும் முடியாது. இதயங்களின் தவிப்பு, ஏக்கம், வெம்மை எப்படிச் சொல்லி புரிய வைப்போம்.


ஒன்றை மாத்திரம் உங்களிடம் வினயமாக முன்வைக்கிறேன். எங்களை காட்சிப் பொருளாக்கி அரசியல் நடத்தாதீர்கள். எங்களை அவமானப்-படுத்தாதீர்கள். எங்கள் தமிழக உறவுகளை ஏமாற்றாதீர்கள்.


இந்த திறந்த மடல் உங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையில்...


வன்னியில்
ஆறாவது இடம்பெயர்வுக்குப் பின்
புதுக்குடியிருப்பு வடக்கில், ஒரு பதுங்கு குழியில் இருந்தபடி...


வெற்றிகொண்டான்,
15/03/2009


"இது சாதாரண கடிதம் இல்லேப்பா. ரத்தக்கண்ணீர் கலந்த கொந்தளிப்பு கடிதம்னே சொல்லணும். இதே கொந்தளிப்பு தமிழ்நாட்டு மக்கள்கிட்ட எழுந்தா காங்கிரசுக்கு கஷ்டகாலம்தான்" என்றபடியே எழுந்தார் சுவருமுட்டி சுந்தரம். கூட்டம் கலைந்தது.
-குமுதம் முச்சந்தி

Sunday, February 22, 2009

ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார்.
காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

"மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால், ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும்" என்று கூறிய அவர், "தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

Monday, February 16, 2009

சிறிலங்கா அரசின் பொய்யுரைக்கு துணை போகும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்

விடுதலைப்புலிகள் ஆயூதங்களைக் கீழே போட்டால் இலங்கை அரசை வற்புறுத்தி போரை நிறுத்தச் சொல்லலாம் -மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் சொல்லுகிறார்

இப்பிடித்தான் 87ல் இந்தியா அரசு விடுதலைப்புலிகளைக் கட்டாயப்படுத்தி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கச் சொன்னது. விடுதலைப்புலிகள் ஆயூதங்களை இந்தியா அரசுக்கு கொண்டு வந்து கையளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியா உளவு அமைப்பு ரா ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஆயூதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இதனை இந்தியா இராணுவ அதிகாரியாக இருந்த கர்கிரட் சிங் சொல்லி இருந்தார்.rediff.com என்ற இணையத்தளத்தில் 97ம் ஆண்டு வந்த இவரின் பேட்டியைப் பார்வையிட


Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha. Later on, all ran into trouble.

Why?

Because they did not stop arming the EPRLF [Eelam People's Revolutionary Liberation Front]. RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual standstill.

Did you tell the army headquarters that the EPRLF was being armed?

Of course.

What was the reaction?

Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything. In the army headquarters there was a core group headed by defence minister, three chiefs and a few senior officers. They used to take decisions, decisions are given to me by the staff officer. Decisions, if I question, the answer will come, These are orders from higher echelons. Higher echelons, that is the famous answer we got. Higher echelons

அத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும், மாத்தையாவையும் சுடச்சொன்னார்கள். (பிற்காலத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவரான ஜோனியை நயவஞ்சகமாக இப்படித்தான் கொன்றது காங்கிரஸ் அரசு)

What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.
http://in.rediff.com/news/2000/mar/31lanka.htm

மகிந்தா அரசு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பினை நிராகரித்து விட்டது. அதுபற்றி சிதம்பரம் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் இந்த இணைப்பினை நிராகரிக்கும் போது கூட காங்கிரஸ் அரசு மூச்சுக்கூட விடவில்லை.

உமாமகேஸ்வரன், பாலகுமாரன், சிவசிதம்பரம் எங்கே என்று கேட்கிறார் சிதம்பரம். பாலகுமாரன் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருக்கிறார். அவர் அண்மையில் சிறிலங்காப்படையின் ஏறிகணைத்தாக்குதல்களினால் காயப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறிலங்கா இராணுவத்திற்கு காங்கிரஸ் அரசு ஆயூதங்களை வழங்கி இராணுவ உதவிகளைச் செய்து வருவது தெரிந்ததே.

'A senior leader and special member of the LTTE K.V. Balakumar was seriously injured during an attack by the Sri Lankan army at Udaiyarkattu area in Mullaithivu Monday (jan26) and is admitted to the intensive care unit,

உமாமகேஸ்வரன் இந்திய உளவுத்துறை ராவின் ஆசியுடன் நடாத்தப்படும் ஈ.என்.டி.எல்.எப் யால் கொழும்பில் கொல்லப்பட்டார்.

Uma Maheswaran was assassinated in Colombo. A PLOTE splinter group ENDLF claimed responsibility

சிவசிதம்பரம் கொடிய நோயினால் இறந்தார்.

Mr. Murugesu Sivasithambaram, President of the Tamil United Liberation Front (TULF), the main constituent of the Tamil National Alliance, passed away peacefully early Wednesday morning(05 June 2002) around two at the age of seventy-nine. The death occurred at the Colombo national hospital after a brief illness.

அண்மையில் அவுஸ்திரெலியாவிற்கு வருகை தந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள், மாணவர்களுக்கு 'விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவர்கள்' என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதில் சிறிலங்கா அரசின் இராணுவத்தினாலும், துணை இராணுவத்தினாலும் கொல்லப்பட்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களின் பெயர்களும் இடம் இருந்தன. தாங்கள் கொன்றவர்களை விடுதலைப்புலிகள் தான் கொன்றதாக சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் பொய்ப்பரப்புரைகள் செய்வதுண்டு. காங்கிரஸ் மந்திரிகளான காசன் அலி, இளங்கோவன், ஞானசேகரன், மணிசங்கர் அய்யர் வரிசையில் சிதம்பரமும் சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு துணை போகிறார்.