Tuesday, October 13, 2009

மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போன கலைஞர் கருணாநிதி

பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..
"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் புஷ்வாணமாகிப் போயுள்ளன.

முதற்கோணலே முற்றும் கோணல் என்பது போல, இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதலாவது நாள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த கிழக்கு மாகாண விஜயம் எவ்வித காரணங்களும் கூறப்படாமலேயே இரத்துச் செய்யப்பட்டது. இன்னமும் இதற்குரிய காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்படவேயில்லை. தமிழ்க் கட்சிகளோடு கலந்துரையாடியதோடு மட்டுமே இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதல்நாள் முடிவடைந்தது.
இரண்டாம் நாளில் (11.10.2009) காலை 8.30 இற்கு யாழ்ப்பாணத்திற்கு இந்திய நாடாளுமன்றக் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியிருந்த யாழ். பொது நூலக கேட்போர் கூடத்திற்கு 8 மணிக்கு முன்னதாகவே குடாநாட்டின் முக்கியப் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூகசேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போர் சென்று காத்திருக்கத் தொடங்கினர். காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்ததுதான் மிச்சம். 10.30 மணிவரையும் நாடாளுமன்றக் குழுவினர் வரவேயில்லை.பொதுநூலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் இதனால் மனம் வெறுத்துப் போய் திரும்பிச் செல்லத் தொடங்கி விட்டனர்.அந்தநேரத்தில் பெரியமனது பண்ணி வானத்தில் ஹெலிகள் வட்டமிட்டு வந்திறங்கின. அதிலிருந்து இந்தியக் குழுவினர் பரபரப்போடு இறங்கினர்.அவர்கள் இறங்கிய வேகத்தைப் பார்த்தபோது அடுத்த நொடியே மக்களின் அவலங்களை தீர்த்துவைத்து விடுவார்கள் போலத் தெரிந்தது! ஆயினும் அணிவகுப்பு மரியாதையோடு உள்நுழைவதில் காட்டிய அவசரமும் அக்கறையும் மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதில் அவர்கள் சிறிதள வேனும் காட்டவில்லை.எல்லாம் செய்கிறோம் என்ற ஒற்றைச் சொல் "மந்திரம்".


இந்தியக் குழுவினர் பொது நூலகத்துக்குள் உள்நுழையும் முன்னர் அவர்களைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் கைகூப்பி, கண்ணீர்மல்கி "முகாம்களில் வாடும் எங்கள் உறவுகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நாளும் நாங்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் போதும். இனியும் அந்த வாழ்வு வேண்டாம்" என்று நெஞ்சுருகும் வகையில் நெகிழ்வுடன் இந்தியக் குழுவினரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையேதும் கூற மறந்த இந்தியக் குழுவினரின் முகங்கள் இயந்திரத்தனமாக இறுகியே இருந்தன.அவர்களின் இதயங்கள் மக்களின் அவலமொழி கேட்டு கொஞ்சமேனும் இளகியதாகத் தெரியவில்லை. "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வரவேற்பு நிகழ்வுக்காக நூலகத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

நூலகத்துக்குள் இந்தியத் தூதுக்குழுவினரின் வருகையை எதிர்பார்த்து இரண்டரை மணிநேரமாக அங்குள்ளவர்களின் காத்திருப்பு நிகழ்வு ஒருவாறு முடிவுக்கு வந்தது. "பராக்!! பராக்!!! இந்தியக் குழுவினர் வருகிறார்கள்" என்று கட்டியம் சொல்லாத குறைதான். அந்தளவுக்கு அதிகாரத் தோரணையோடு மேடையில் ஏறியமர்ந்தார்கள் அவர்கள்.அதன்பின் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்து வந்திருந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு உரையாற்ற எழுந்தார்.

"ரைம் ஷார்ட்டா இருக்கிறதனால ஸ்ரைட்டா மேட்டருக்கு வாங்க"
(நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக விடயத்துக்கு வாருங்கள் என்பதைத் தான் இப்படித் "தமிழில்" கூறினார்.)
என்று கூறி மக்களை நோக்கி அவர்களது பிரச்சினைகளைத் தனக்குக் கூறுமாறு வேண்டினார். அட! மக்கள் பிரச்சினைகளை அறிவதில் பாலு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்று அங்குள்ளவர்கள் அடைந்த ஆச்சரியம், மக்கள் பிரச்சினைகளை அவர் கேட்பதில் காட்டிய அசிரத்தையால் இருந்த இடம்தெரியாமல் மறைந்தோடி விட்டது. அங்கு பிரச்சினைகளை எடுத்துரைக்க முற்பட்ட பலரும் நலன்புரிநிலையங்களில் வாடும் மக்களைப் பற்றியும் அவர்களின் விடுவிப்புப் பற்றியுமே அதிகமாகப் பிரஸ்தாபித்தார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குரலில் இவ்வாறு நலன்புரிநிலைய மக்களைப் பற்றிக் கூறத்தொடங்கியது இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த ரி.ஆர்.பாலுவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.


இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள்
மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே!



எரியும் பிரச்சனை குறித்து கண்டறிய வந்தவர்களின் போக்கு .....

"இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.

அத்துடன் பலர் தமது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே பாலுவால் அதட்டும் தொனியில் அவர்களது கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்படாது தடுக்கப்பட்டது. வேறு விடயங்களைப் பேசுங்கள் என்று பாலு கூறியதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதிப்பிரச்சினை பற்றியும், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றியும் இப்போதைக்கு அவசரமோ அவசியமோ இல்லாத உப்புச் சப்பற்ற விடயங்களே அதன்பின்னர் அவர்களுக்கு கூறப்பட்டது. நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறப்பட்டபோது விட்டேத்தித் தனமாக இருந்த இந்தியக் குழுவினர் இத்தகைய சில்லறைப் பிரச்சினைகள் பற்றிக் கூறும்போது மிக அவதானமாக அவற்றைச் செவிமடுத்ததுதான் அன்றைய பெரும் வேடிக்கை!

நூலகத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர், யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களைகுறிப்பாக நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதே இந்தியக் குழுவினரின் அடுத்த நிகழ்வாக இருந்தது.ஆயினும் 8.30 மணிக்கு வரவேண்டிய இந்தியக் குழுவினர் ஆடியசைந்து 10.30 மணிக்கே வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பஸ்வண்டிகள் மூலம் நூலகத்துக்குக் ஏற்றி வரப்பட்டனர். அங்கு "இந்தியக் குழுவினர் கேட்போர் கூடத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வு முடிந்தபின்னர் வெளியே வரும்போது வீதியில் நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்" என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பத்துப்பத்து மாணவர்களாக உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியக் குழுவைச் சந்திக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் அரைவாசிப் பேரே உள்நுழைந்து அவர்களைச் சந்திக்க முடிந்தது.அந்தச் சந்திப்பின்போது நலன்புரிநிலையத் திலிருந்து வந்த மாணவர்களைத் தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியவோ அல்லது அவர்களுக்கான கல்வி தொடர்பான உதவிகளை வழங்குவது பற்றியோ இந்தியக் குழுவினர் மறந்துபோயும் வாய்திறக்க வில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்துக்கு வராமல் தம்மை இந்தியக்குழுவினர் அவமதித்து விட்டமையால் மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தயங்காமல் கேட்டார்கள்.

"ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்குப் பதிலீடாக இன்னும் எத்தனையாயிரம் தமிழ் மக்களைப் பலி கொள்ளப்போகிறீர்கள்?"
"வடக்குகிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம் தமிழர்களுக்குச் சுயாட்சியுடன் கிடைக்கும் தீர்வே அவசியம். அதற்கு இந்தியா என்ன செய்யப்போகிறது?"
"எம்முடைய குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களில் வாடுகிறார்கள். அவர்களை எம்முடன் சேர்த்துவைக்க உதவுவீர்களா?" என்று கேள்விக் கணைகள் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து இந்தியக் குழுவை நோக்கி ஏவப்பட்டன. அப்போதும் உரிய பதிலேதும் சொல்லாமல் விட்டேத்தித் தனமாக "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது.

கல்லும் கசிந்துருகும் கண்ணீர்க் கதையின் போது .....
அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியபடி நலன்புரிநிலையத்திலிருக்கும் தன் குடும்பத்தவர்கள் பற்றி கல்லும் கசிந்துருகும் வண்ணம் விவரித்துக் கொண்டிருக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், வலு "ஹாயாக" சிகரெட் ஒன்றை ரசித்து ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தத்தில் இந்தியக் குழுவினரின் யாழ்.விஜயம் எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கொண்டிராமல் பூஜ்ஜியமானதாகவே அமைந்துவிட்டது.

"இலங்கையிலுள்ள எல்லா நலன்புரிநிலையங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை அறியவே இங்கு வந்துள்ளோம்" என்று நூலகத்தில் மார்தட்டினார் ரி.ஆர்.பாலு. ஆனால் குடா நாட்டிலுள்ள எந்த ஒரு நலன்புரிநிலையத்துக்கும் அவர்கள் செல்லவேயில்லை. இந்தியக் குழுவினர் வருவார்கள், தமது குறைகளைக் கேட்பார்கள் என்றெண்ணிக் காத்திருந்த பல நலன்புரிநிலைய மக்கள் இலவுகாத்த கிளிகளாக ஏமாந்து போனதுதான் மிச்சம். உல்லாசப் பயணிகள்போல "வந்தார்கள், சென்றார்கள்" என்ற ரீதியில் இந்தியக்குழு நடந்துகொண்டிருப்பதால் அவர்களின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையிலோ நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினையிலோ எவ்வித செயலூக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக கப்பலில்அனுப்பப்பட்ட பொருள்களையே உரிய முறையில் இறக்கி மக்களுக்கு வழங்கச் செய்வதில் கையாலாகாத்தனமாக இருக்கின்றது இந்திய அரசு. அப்படியிருக் கையில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்தனமான திட்டமிடலற்ற மேம்போக்கான விஜயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பினோமானால் மீண்டும் ஏமாறுவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை. *


- ஒளண்யன் -
-உதயன்

Wednesday, September 30, 2009

இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

2009ம் ஆண்டில் உலக நாடுகளில் நிலநடுக்கம், காற்றுத்தீ, விமான விபத்துக்கள், உள்நாட்டுப் போர்கள் காரணமாக அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழீழத்தில் சிறிலங்காப்படையினாலும் துணை போன இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளினாலும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நேற்று பசுபிக் நாடுகளில் ஒன்றான சமோவாதீவில் சுனாமியினால் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இன்று இந்தோனேசியா சுமத்திரா தீவில் நில நடுக்கம் 1000க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
http://www.smh.com.au/environment/second-e...tml?autostart=1

Tuesday, June 2, 2009

86வது அகவையில் காலடி வைத்திருக்கும் தமிழனத்தலைவர் திரு. மு. கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


உலகத்திலே 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து கின்னஸ் சாதனை பெற்ற தமிழனத்தலைவன் திரு.மு. கருணாநிதி அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழினத்தலைவர் அவர்களின் உண்ணாவிரதம் காரணமாக சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய யுத்தத்தை நிறுத்தியதாக தமிழினத்தலைவரின் ஊடகங்கள் (சன், கலைஞர், தினகரன், முரசொலி) செய்தி வெளியிட்டது தெரிந்ததே. இதை நம்பி தமிழ் நாட்டு மக்கள், சிறிலங்கா அரசுக்கு ஆயூத உதவிகளைச் செய்து, ஈழத்தமிழர்களையும், அப்பாவித் தமிழக மீனவர்களையும் கொலை செய்யக் காரணமாக இருந்த காங்கிரசுக் கூட்டணியை தமிழ் நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 28 இடங்களில் வெற்றி பெற வைத்து மீண்டும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவு தந்ததும் தெரிந்ததே.

பி.கு - உண்ணாவிரதம் முடிந்தபின்பு தான் அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

Monday, May 25, 2009

காந்தி தேசமே! இது நீதியா?

வன்னியில் ஏற்பட்ட பேரழிவுக் கொடூரங்களினால் துடித்துப் போய்க் கலங்கி நிற்கின்றது தமிழினம்.

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற அவலம் ஒருபுறம். அநீதி இழைத்த தரப்புக்களைத் தட்டிக் யேட்க வக்கில்லாமல் மௌனித்திருக்கும் சர்வதேசம் குறித்து மறுபுறம் பெருவிசனம். வெஞ்சினம் மனதுக்குள் குமுறுகின்றது. துன்ப துயரங்களோடு அதனையும் சகித்துப் பார்த்திருப்பதைத் தவிர தமிழினத்துக்கு வேறு மார்க்கம் என்னதான் உண்டு?

ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத் தின் பேரில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமையைப் பார்த்தி ருக்க மாட்டோம் என்றும்
மக்களைக் கொன்றொழிக்கக் காரணமானோர் சர்வ தேசச் சட்டங்களின் விசாரணைகளில் இருந்து தப்பிப் பிழைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும்
ஒரு செய்தியை ஆறுதல் தகவலை இப்போது சர்வ தேசம் கூற முற்படுவதாகத் தெரியவருகின்றது.

இலங்கை யுத்தத்தில் இடம்பெற்றவை என்று கூறப் படும் போர்க் குற்றங்கள் குறித்து விசேடமான விசாரணை கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரே ரணை ஒன்று நாளை ஜெனீவாவில் நடைபெற விருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசேட கூட்டத்திற்கு வரவிருப்பதாகத் தெரிகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விட யத்தை மனித உரிமைகள் கவுன்ஸிலில் விசேட விவ காரமாக ஆராய்வதற்கான பிரேரணையாகக் கொண்டு வருவதற்குத் தேவைப்படும் மேலும் பதினாறு உறுப்பு நாடுகளின் ஆதரவை இதற்குப் பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,மெக்ஸிக்யோ, மொரிஸியஸ், நெதர்லாந்து, கொரியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா,சுவிட்ஸர்லாந்து, உக்ரைன், உருகுவே போன்ற நாடுகளே அவை.
எனினும், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் மொத்தமாக அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் தனக்கு ஆதரவான தேசங்களை ஒன்று திரட்டி, இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் கவுன்ஸி லின் முன் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியில் கொழும்பும் இறங்கியிருப்பதாகத் தகவல்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலே ஷியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவூதி அரே பியா, எகிப்து, நிக்கராகுவா, பொலீவியா போன்ற தேசங் களே இலங்கைக்காக வரிந்து கட்டிக் கொண்டிருக்கின் றன என்று கூறப்படுகின்றது.
எனினும், இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளை வழிக்குக் கொண்டு வருவதற்குத் தன்வசம் உள்ள ஆயுதம் ஒன்றை அமெரிக்கா கடைசி நேரத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வன்னிக் களத்தில் இறுதி நேர யுத்தம் எவ்வாறு கொடூரமாக குரூரமாக முன்னெடுக்கப்பட்டது என்ப தைத் தனது செய்மதி உளவுத் தகவல்கள் மூலம் மிகத் துல்லியமாகவும், துலாம்பரமாகவும் அமெரிக்கா பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சர்வ தேசப் போரியல் குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படக் கூடிய பல அம்சங்கள் ஆதாரத்தோடு தெளிவாக அவற் றில் அடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை விடயத்தைப் போரியல் குற்ற விசார ணைக்கு உட்படுத்தக் கூடாது என வாதிடும் தேசங் களுக்கு இந்த ஆதாரங்களின் ஒரு பகுதியைக் கடைசி நேரத்தில் அமெரிக்கா கசிய விட்டு விட்டு, இந்த விட யங்கள் குறித்தா விசாரிக்கக் கூடாது என வாதிடுகின் றீர்கள் என அமெரிக்கத் தரப்புக் யேள்வி எழுப்பும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைப் பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கொழும்புக்குத் துணை போனது பாரதம்.

இப்போது, அந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து நடைபெறக் கூடிய சர்வதேசவிசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத் திடம் இருந்து கிடைக்கக்கூடிய நீதிக்கும் வேட்டு வைக்க முயல்கிறது அதே பாரதம்.

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த இழைத்து வருகின்ற இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு முண்டு கொடுத்ததன் மூலம், ஈழத் தமிழர்களுக்கு முதுகில் குத்தும் கொடூரத்துக்குத் துணை போன தமிழக சக்தி களும், கட்சிகளும் இப்போது சர்வதேசவிசாரணைகள் மூலம் ஈழத் தமிழருக்கு நீதி கிடைப்பதை முட்டுக்கட்டை போட்டுத் தடுக்கும் கொடுமையில் இந்தியா ஈடுபடும்போது என்ன செய்யப் போகின்றன?

ஈழத் தமிழர்களின் விடயத்தைப் பொறுத்தவரை பாரதம் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செசாயாமல் இருந்தால் போதும். ஈழ யுத்தத்தில் கொழும் புக்கு நேரடியாகத் துணைபோய், அதன் மூலம் உபத் திரவம் செய்த இந்தியா, இப்போது ஈழத் தமிழர்களுக்கு இறுதியில் நீதி, நியாயம் செய்யக்கூடிய சர்வதேசநீதி மன்ற விசாரணைக்கும் தடைக்கல் போடுவதன் மூலம் தனது உபத்திரவத்தைத் தொடர முயல்கின்றது. காந்தி தேசமே! இது உனக்யே நீதியா?

- உதயன்

Wednesday, May 6, 2009

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்--தமிழருவி மணியன்

உண்ணாவிரதம் என்ற கடினமான போராட்டத்தில் நாம் இன்று ஈடுபடுகிறோம். துப்பாக்கி தூக்குவது மிகவும் எளிது. உண்ணாநிலைப் போரில் கொஞ்சம்கொஞ்சமாக நாம் நம்மை அழித்துக்கொண்டு,அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கி நகர் வதைவிட, காவல் துறையின் குண்டுகளுக்கு பலியாவதும், தூக்குக் கயிற்றில் தொங் குவதும் சிரமமற்றசெயல். உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுவிட்டுப் பின்வாங் குவது புரட்சியாளனுக்குப் பெருமை சேர்க்காது.

அதைவிட முதலிலேயே உண்ணாநிலையில் இறங்காமல் இருந்துவிடலாம்...' - என்று பகத்சிங்கின் தோழர்களை எச்சரித்தவன் யதீந்திரநாத் தாஸ். அறுபத்துமூன்று நாட்கள் மருந்து உட்பட எதையும் ஏற்காமல் மறுதலித்து உயிர் துறந்த மாவீரன் அவன்.

'தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களர் தடுக்கப்பட வேண்டும்; தமிழீழப் பகுதியில் சிங்களர் காவல் நிலையங்கள் கூடாது; வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் இடைக்காலநிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; தமிழர் வாழும் பகுதிகளில் ராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்' என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இராசையா என்ற திலீபன், யாழ்ப்பாணம்நல்லூர்கந்தசாமி கோயில் திடலில் தண்ணீரும் அருந்தாமல் 12 நாள் உண்ணா நிலைப் போர் நடத்தி உயிர்நீத்து, ஈழப் போராளிகளின் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தான்.

தமிழகத்தின் ஆட்சி நாற் காலியை அலங்கரிக்கும்கலைஞர், அண்ணா சமாதியில்யாரை எதிர்த்து அரை நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்? 'இலங்கை அரசு வாங்கிய பலிகளிலே ஒரு பலியாக நானும் அமைய இந்த உண்ணாநோன்பை மேற் கொண்டிருக்கிறேன்' என்று அவர் அறிவித்ததற்கு என்ன அர்த் தம்? பல்லாயிரம் தமிழர்களை பலிவாங்கிய ராஜபக்ஷே அரசைக் கடுமையான மொழியில் கண்டிக்காமல், புழுக்கத்தோடு புலம்புவதா தமிழகத்தின் உரிமைக்குரல் கொடுக்கும் தனிப்பெரும் தலைவரின் போர்ப் பரணி?

பதினெட்டு முறை உண்ணாநோன்பிருந்து, ஒவ்வொரு முறையும் கோரிக்கை நிறைவேறிய பின்பே அந்த அகிம்சைப் போரை நிறுத்தியவர் அண்ணல் காந்தி. அவரேகூட, 'என்னை நேசித்தவர்களைச் சீர்திருத்தவே நான் உண்ணாநோன்பை மேற்கொண்டேன். என்னை நேசிக்காத, என்னுடைய எதிரியாகக் கருதிய தளபதி ஜெனரல் டயரைச் சீர்திருத்துவதற்கு நான் உண்ணாநோன்பிருக்க மாட் டேன்!' என்றார். ஒருவேளை, கலை ஞரும் ராஜபக்ஷேவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்காமல்... தான் மிக அதிகமாக நேசிக்கும் 'சொக்கத் தங்கம்' சோனியாவையும், மன்மோகன் சிங்கையும் சீர்திருத்தும் நோக்கோடுதான் காந்திய வழியில் அரை நாள் தியாகத்தை அரங்கேற்ற முடிவெடுத்தாரோ?

இந்த உண்ணாவிரதத்துக்கு பலன் இருக்கும் என்று கலைஞர் முழுமன தாக நம்பியிருப்பாரேயானால்... அதுவும்கூட மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தால்... எத்தனை குழந்தைகள் பிழைத்திருக்கும்... எத்தனை குடும்பங்கள் தழைத் திருக்கும்... எவ்வளவு ஆண்களும் பெண்களும் சாவுப் பள்ளத்தில் சரிந்துவிழாமல் ஈழ நிலத்தில் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்! பாழாய்ப் போன நாடாளுமன்றத் தேர்தல், மூன்று மாதங்களுக்கு முன்பே வந்திருக்கக்கூடாதா?

இதற்கும்தான் எவ்வளவு விளம்பரம்; எத்தனை ஆர்ப்பாட்டம்! புலர்காலைப் பொழுதில் அண்ணா சமாதியில் கலைஞர் தன் உயிரை பலியிடும் முடிவோடு(!) உண்ணாநோன்பில் உட்கார்ந்தார். தொண்டர்கள் கூடினர். தலைவர்கள் திரண்டனர். உண்ணாநோன்பைக் கைவிடும்படி அவர்கள் உயிர் உருகக் கதறியபோதும் கலைஞர் அசைந்து கொடுக்கவில்லையாம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் அறிவுறுத்தியபடி கலைஞர் கட்டிலில் கால் நீட்டிப் படுத்தார். உண்ணாநோன்பு உக்கிரமான சூழலை நெருங்கியதாம்! ப.சிதம்பரம் தொலைபேசியில் தொடர்புகொண்டாராம். ஆறு மணி நேர உண்ணாநோன்பில் ராஜபக்ஷே அச்சத்தின் மடியில் விழுந்துவிட்டதாகவும், அலறியடித்துப் போரை நிறுத்திவிட்டதாகவும் செய்தி சொன்னாராம். தன் ஆற்றல் முதல்வருக்கு அப்போது உடனே புரிந்துவிட...

படுக்கையிலிருந்து கலைஞர் எழுந்தார். 'இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டது' என்று பிரகடனம் செய்தார். ஈழத் தமிழினம் ஒரு வழியாக உயிர் பிழைத்ததறிந்து அவரைச் சுற்றி வாழ்த்தொலிகள், ஜெய கோஷம்! 'சர்வதேச நாடுகள் சாதிக்க முடியாததை ஒரு தனி மனிதர் சாதித்தார்' என்று 'வீரமணி'களின் புகழாரம்; திருமாக்களின் தேவாரம்! உலக வரலாற்றில் இவ்வளவு விரைவாக எந்த உண்ணாநோன்பும் வெற்றி பெற்றதில்லை. புன்னகையுடன் கலைஞர் கோபாலபுரம் நோக்கி காரில் பறந்தார். உண்ணாநோன்பு 'வெற்றி'க்குப் பின்பு இருபது நிமிடங்களில், முல்லைத்தீவின் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தின் முப்படைத் தாக்குதல்களில் 272 அப்பாவித் தமிழர் அழிந்துபோயினர். 'தீவிரவாதி களை ஒழிக்கும் செயலில் ராணுவத்துக்கு வெற்றி நெருங்கி வந்திருக்கும் நிலையில், நாங்கள் எங்கள் நடவடிக்கைகளில் இருந்து ஓயப்போவதில்லை' என்ற ராஜபக்ஷேவின் ஆணவக் குரல் உலகின் காதுகளில் விழுந்தது.

கலைஞரும், 'மழை நின்றுவிட்டது; தூவானம் தொடர்கிறது' என்று கவித்துவத்தோடு பேட்டி கொடுக்கிறார். கொத்துக் குண்டுகளை நம் சொந்த சகோதரர்களின் குடும்பங்கள் மீது தொடர்ந்து வீசுவதை முல்லைத்தீவுப் பகுதியில் செயற்கைக்கோள் மூலம் படமெடுத்து ஐ.நா. சபை வெளியிட்டது. அது கலைஞருக்கும், ப.சிதம்பரத்துக்கும் குளிர் மழையாகத் தெரிகிறதா? 'ஒருவர் செத்தால் ஊர் சுமக்கும். ஊரே செத்தால் யார் சுமப்பார்...' என்ற அதீத அவலம்!

'கடைசிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாட்டின் சுதந்திரத்தைக் காப்போம்' என்று ஒருவர் சொன்னதும், 'கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்போது ஒருவன் செத்துவிடுவானே. அவனால் எப்படி சுதந்திரத்தைக் காக்க முடியும்?' என்றார் பெர்னார்ட்ஷா. கலைஞர் பேசுகிற அலங்கார வார்த்தைகளும் இந்த வகைதான்.

'மார்க்சிஸ்ட் கட்சியினர் இலங்கை இறையாண் மைக்கு உட்பட்ட அரசியல் தீர்வு அமையவேண்டும் என்கிறார்கள். என் கருத்தும் அதுதான்' என்கிறார், நேற்று தமிழீழம் கேட்டுக் கலிங்கத்துப்பரணி பாடிய கலைஞர்! 'வள்ளித் திருமண' நாடகத்தில் வேலனாக நடிப்பவரே, அடுத்து வேடத்தை மாற்றி விருத்தனாக நடிப்பது போல்... இந்த 'இலங்கேஸ்வரன்' நாடகத்தில் கலைஞர் எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பார்.

சிங்களம் ஆட்சிமொழி, பௌத்தம் அரச மதம், சிங்களர் மட்டுமே ஆளப் பிறந்தவர் என்று பேசும் காடையர்களோடு தமிழர் கலந்து வாழ்வது சாத்தியமா? சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிறுத்தி... ஓர் இன அழிப்புப் போரை 'பயங்கரவாத அழிப்பு' என்ற போர்வையில் திட்டமிட்டு நடத்தும் சிங்கள மனநோயாளிகளுடன் இனியும் தமிழர், இறையாண்மைக்கு உட்பட்டு இணைந்து வாழக் கூடுமா?! தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசா வாவுக்கும், இந்தோனேஷியாவிலிருந்து விடுபட்ட கிழக்கு தைமூருக்கும் ஒரு நீதி; ஈழத் தமிழருக்கு ஒரு நீதியா?!

கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு முப்பது லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளிகள் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். ஒரு முகாமில் மட்டும் முப்பதாயிரம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டனர். மனித உரிமைகள் காற்றில் பறந்தன. இந்திய ராணுவம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்திரா காந்தியின் தயவால் புதிய வங்க தேசம் தனி நாடாகப் பிறந்தது. பாகிஸ்தான் இரண்டாகப் பிரிவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. சோனியாவின் வழிகாட்டுதலில் இயங்கும் மன்மோகன் அரசு இந்திய நலனுக்காகவே இலங்கைத் தீவு ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறது.

ஈழப்பிரச்னை ஓர் இனப் பிரச்னை. ஆனால், அது இங்குள்ள காங்கிரஸ்காரர்களால் பயங்கரவாதப் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி படுகொலையைக் காட்டிப் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? 'சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் செம்மை மறந்த' ப.சிதம்பரம் போன்றவர்கள், 'யார் முத்துக்குமார்?' என்று ஏளனக் குரலில் கேட்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் போன்றவர்கள், ஈழப்பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லும் கே.வி.தங்கபாலுவைப் போன்றவர்கள், தமிழகத் தேர்தல் களத்தில் கலைஞரின் குடைநிழலில் வெற்றிக் கனவுகளோடு நிற்கிறார்கள்!

அவர்கள் கனவை வெற்றுக் கனவாக்க வேண்டியது, தமிழரின் முதற் கடமை. 'ஈழப்பிரச்னையில் கடுகளவு பாதிப்பும் ஏற்படாது!' என்று கட்டியம் கூறும் கலைஞரின் வேட்பாளர்களை விலாசமற்றவர்களாக மாற்றுவது வாக்காளர்களின் இரண்டாவது கடன். இவர்களுக்குத் தரும் தோல்வியின் மூலமே புதுடெல் லிக்கு தமிழனின் உண்மையான உணர்வு, புத்தியை புகட்ட முடியும்.
ரோமாபுரியின் செனட்டராக இருந்த டேசிடஸ், 'A bad peace is even worse than war' என்றதுதான் ப.சிதம்பரத்தின் பேச்சையும், என்றும் மணக்காத கலைஞரின் காகிதப் பூ நாடகக் காட்சிகளையும் காணும்போது நெஞ்சில் நிழலாடுகிறது. வின்ஸ்டன் சர்ச்சில் எதற்கும் நேரடியாக பதிலளித்ததில்லை. ஒருவர் அவரிடம், 'இப்போது மணி என்ன?' என்றார். உடனே சர்ச்சில், 'உங்கள் கடிகாரத்தில் மணி என்ன?' என்று கேட்டார். ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞர், சர்ச்சிலைப் போல் சாமர்த்தியம் காட்டுகிறார். 'ஒரு ராஜதந்திரி தன் அதிகபட்ச ராஜதந்திரத்தாலேயே அழிவைத் தேடிக் கொள்கிறான்' என்பதை, கலைஞருக்கு விரைவில் காலம் கற்றுக் கொடுக்கும்!
- விகடன்

Wednesday, March 25, 2009

எவ்வளவு காலம் காங்கிரஸ் இளங்கோவன் பொய் சொல்லப்போகிறார்?


பிரணாப் முகர்ஜி இலங்கை போன பின்னர்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்ற பொய்யை காங்கிரஸ்காரர்கள் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? 48மணித்தியாலம் போர் நிறுத்தம் செய்யவில்லை. மக்கள் வெளியேற 48 மணித்தியால கெடுதான் சிறிலங்கா அரசு அறிவித்தது. அதனை சிங்கள இராணுவம் உறுதி செய்தது.அந்த 48மணித்தியாலத்தில் சிறிலங்காப்படைகளினால் கொல்லப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை 100யும் தாண்டும்.

இதோ இளங்கோவனின் பொய்யுரை--

கோபியில் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தற்போது சிறு சிறு கட்சிகள் எல்லாம் பெரிய கட்சிகளின் நாடியை பிடித்து பார்க்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள சிறிய கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றால் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்களுக்குத் தான் நஷ்டம்.

சத்தி-சாம்ராஜ் நகர் ரெயில்வே திட்டப்பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இதற்கான திட்டப்பணி தடைபட்டு கிடக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் பணியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு சென்ற 48 மணி நேரத்துக்கு பின்பு தான் போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன் வந்ததது.
பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனைகளையும், தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகள் செய்த சாதனையையும் சொல்லி வாக்கு கேட்போம். திமுக -கங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனறார்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க ஐநாவுடன் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது என்றும் மேலும் பொய்யுரைக்கும் இளங்கோவனின் காங்கிரசு அரசு தான் தமிழர்களைக் கொல்ல நடவடிக்கை எடுக்கிறது. இவரின் பொய்யுரை கேட்க நல்லகாலம் பெரியார் இப்பொழுது உயிருடன் இருக்கவில்லை.

Monday, March 16, 2009

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு வன்னியில் இருந்து ஒரு கண்ணீர் கடிதம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன். ஒரு ஓரமாக அமர்ந்தது அலப்பறை டீம். மிக முக்கியமான கூட்டம் என்றழைத்த சித்தனைப் பார்த்து, அப்படி என்னப்பா முக்கியமான சேதி? என்று வம்பிழுத்தார் சுவருமுட்டி.

"அது ஒண்ணுமில்லப்பா. தேர்தல் வந்துடுச்சுல்ல. தமிழ்நாடு முழுக்க இலங்கைத் தமிழர்கள் ஆதரவு பத்திக்கிட்டிருக்குல்ல. ஈழத்தமிழ் மக்கள் தினம்தோறும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுக்கிட்டிருக்கிறதுக்கு காரணமே காங்கிரசின் மைய அரசுதாங்கிற கோபம் இருக்குல்ல. அத மனசுல வச்சுதான் நாங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டப்போறோம்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு அறிவிச்சிருக்காரு. இப்படியாவது தப்பிடலாங்கிற நப்பாசை. அது தமிழ்நாடு மக்கள்கிட்ட எப்படி எடுபடுதோ தெரியல. ஆனா தங்கபாலுவின் அந்த நிவாரணவசூல் அறிவிப்பு ஈழத்தமிழர் மத்தியில பெரிய ஆதங்கத்தை எழுப்பியிருக்கு. அந்த மக்கள் சார்பான ஒரு கொந்தளிப்பு கடிதம் ஒன்று வன்னியில் இருந்து நமக்கு வந்திருக்கு. வெற்றிகொண்டான் என்கிற பெயரில் எழுதியிருக்காங்க. அத அப்படியே வாசிக்கிறேன் கேளுங்க..." என்று கூறிய சித்தன் வாசிக்கத்தொடங்கினார்.

மதிப்பிற்குரிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு அவர்களே!


வணக்கம்.


உயிரைக் கையில் பிடித்தபடி நாளின் ஏறக்குறைய முழுப்பகுதியையும் பதுங்கு குழிகளுக்குள் உயிர் வற்றிப்போக ஒடுங்கிக்கிடந்து குண்டுச்சத்தமற்ற நாளையின் வரவுக்காக ஏங்கிக் காத்துக்கிடக்கும் உங்கள் இனத்தவன் எழுதுகிறேன். கடந்த ஆண்டின் இறுதியில் தீவிரமடைந்து இந்த ஆண்டு மிகமிக மோசமடைந்து விட்ட 21ம் நூற்றாண்டின் மிக மோசமான மனித அவலம் என்று வர்ணிக்கப்படும் வன்னி அவலத்தின் நேரடிச் சாட்சியம் எழுதுகிறேன்.


என் இனத்தவரே!


எமக்காக நிதி சேகரிக்கிறீர்களாம். சோனியா அம்மையாரின் உத்தரவாம். பதுங்கு குழிக்குள் வாழ்க்கை என்றாலும் அறிந்தோம். அதிர்ந்தோம். சிங்களவனின் கொடிய குண்டைவிட அபாயம் நிறைந்த செய்தி.

இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள். இப்போது எங்கிருக்கிறீர்கள். எம்மீது ஏன் இந்த திடீர் அக்கறை?. எங்களை அவமானப்படுத்தாதீர்கள். தயவு செய்து எங்களை அவமானப்படுத்தாதீர்கள்.

மனசாட்சி ஒன்றிருந்தால் உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். இன்றைய எமது நிலைக்கு யார் காரணம்? உண்மையில் நீங்கள் தமிழனாக இருந்தால், அதையும் தாண்டி இந்தியனாக இருந்தால், அதையும் தாண்டி மனிதனாக இருந்தால், தமிழக மக்களின் இன்றைய அவல நிலைக்கு இந்தியா, குறிப்பாக காங்கிரஸ் கட்சியே முக்கியமான காரணம் என்பதை ஒத்துக்கொள்வீர்கள். வாய்கூறாவிட்டாலும் மனம் கூறும்.

சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு முண்டுகொடுத்தீர்கள். இன அழிப்பு போருக்கான ஆயுத தளவாடங்களைக் கொடுத்தீர்கள். யுத்த கப்பல்கள் கொடுத்தீர்கள். பயிற்சிகள் கொடுத்தீர்கள். போர் நிபுணத்துவ உதவிகளை செய்தீர்கள். எங்களது விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கான ஆசிகளையும் ஆலோசனைகளையும் அனைத்து விதமான உதவிகளையும் பொளத்த சிங்களப் பேரினவாதப் பேய்களுக்கு செய்தீர்கள். பிளவுகளை ஏற்படுத்தினீர்கள். எம்மைப் பலவீனப்படுத்தினீர்கள். இந்திய நலன் என்ற சிறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு சின்னஞ்சிறிய இனமான தமிழீழ தேசிய இனத்தை சிதைத்தீர்கள். கூறுபோட்டீர்கள். மனிதம் தவறிவிட்டீர்கள்.

உலகம் போற்றும் மகாத்மா காந்தியையும், அகிம்சை தத்துவத்தையும் முன்னால் காட்சிக்கு வைத்து விட்டு நீங்கள் எம்மண்ணில் செய்த அக்கிரமங்கள், கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்று சிங்கள இனவெறி அரசுக்கு கூட்டாகத் தொடர்கிறீர்கள். அதுசரி. உண்மையில் எங்கள் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதா?

அரை உயிர் பறிக்கப்பட்டு, கூன் குருடு நொண்டிகளாக்கி விட்டு பின் மருந்து தருகிறீர்கள். உடை தருகிறீர்கள். இப்படி ஒரு கொடுமை நடவாமல் தடுப்பதை விட்டு கொடுமையின் விளைவுக்கு ஒத்தடம் போடுகின்றீர்கள். இது நியாயமா?...."


இப்போதாவது காங்கிரஸ் நல்லதை செய்ய முன்வந்திருக்கின்றதே. அதைக்கூட குறைசொன்னால் எப்படீ..?- கோபால்.


"அடடே...அப்படியா. அதற்கும் ஒரு விளக்கம் சூடாகவே தொடர்கிறது கேளுங்கள்..."- சித்தன் தொடர்ந்தார்.


"....உலகை எட்ட வைத்து விட்டு, போரை நடத்துவது நீங்களே என்று சிங்களத் தரப்பே தற்போது கூற ஆரம்பித்துவிட்ட நிலையில், போரை நிறுத்துவதற்கு மட்டும் அது உள்நாட்டுப் பிரச்னை என நீங்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை. இந்தப் பிரச்னையின் ஆணிவேர்வரை உங்கள் கையிருக்கிறதே. மறைக்க முனையாதீர்கள். தற்போது தேர்தல் காலம். தமிழகத்தில் வினைப்பலன் கிடைத்துவிடுமா என்று அஞ்சுகிறீர்கள். அரிதாரம் பூசிக்கொண்டு வேறொரு பாத்திரத்தில் நடிக்க முற்படுகிறீர்கள்.


ஈழத்தமிழருக்காக நிதி சேகரிப்பு!.


எது எங்கள் மரணச் சடங்கிற்கா அரிசி சேகரிக்கிறீர்கள். வாய்க்கரிசிக்கா?

ஈழத்தமிழர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அது உங்களுக்கும் தெரியும். பின் யாரை ஏமாற்ற இந்த வேடம்?

யாரை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் தமிழ் உறவுகளையா? ஏமாற மாட்டார்கள்.

புளித்துப்போன அரசியல் சவடால்கள், பொய்யுரைகள் கேட்டு ஏமாந்த காலம் போயிற்று. இன்று தமிழகத்தில் புதிய இரத்தம். தமிழ் இரத்தம். மானம் கொப்பளித்துப் பாயும் இளரத்தம் ஓடுகிறது. விசயங்களுக்கு இங்கே இடமில்லை.

உண்மைகளைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். கட்சிகளுக்காகவும், கட்சித் தலைவர்களுக்காகவும் உயிரை மாய்த்த காலம் போய் இன்று இனத்துக்காக களமிறங்கியிருக்கும் சிந்தித்துச் செயல்படும் இளந்தமிழர்கள் மத்தியில் உங்கள் நரித்தனங்கள் எடுபடாது. உங்களது காலம் பாழாய்ப்போன பழைய காலம்.

இன்று புதிய மனிதர்கள். புதிய காற்று. அறிவுடை மக்கள். அழகான தமிழகம்.


தங்கபாலு அவர்களே!


கொஞ்சம் தமிழராய் சிந்தித்துப் பாருங்கள். கொஞ்சநேரம் போதும். கண்களை சிறிது மூடி தமிழனாய் சிந்தியுங்கள். புதிய மனிதனாய் பிறப்பீர்கள். எங்கள் அழிவில், தமிழீழ மண்ணில் கொட்டிக்கிடக்கும் எங்கள் குருதியில் துண்டங்களாய் வன்னி எங்கும் சிதறிக்கிடக்கும் எங்கள் குழந்தைகளின் எங்கள் பெண்களின் எங்கள் உறவுகளின் சதைத் துண்டங்களில் உங்களின் கை இருக்கிறது அன்பரே!


தற்போது புதிதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. போர் முடிவடைந்ததும் இலங்கை அரசு இனப்பிரச்னைக்கு தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்திருக்கிறாராம்.


போரை நிறுத்துவதில் தலையிட முடியாது. அது உள்நாட்டுப் பிரச்னை என்று கூறி நழுவும் இந்தியா, போர் முடிந்ததும் தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பது பொருத்தப்பாடாய் இல்லை. ஆக..இந்தப் போரை இறுதிவரை தொடர்வதில் உறுதியாக இருக்கிறது இந்தியா. அப்படியானால் எல்லாம் முடிந்தபின் இந்த அரிசி பருப்பு, மருந்து, பணம் என்பனவற்றை சேகரிக்கலாமே? அதுவரை உங்கள் தேர்தல் பொறுத்திருக்காது. அதனால் இப்பொழுதே தொடங்குங்கள். ஆயிரமாயிரமாய் ஓட ஆரம்பித்து நூறாய் சுருங்கி இன்று பத்தாய் துவண்டு கிடக்கிறோம். ஆனால் மண்டியிட மாட்டோம் அன்பரே.


வெள்ளை வேட்டி கட்டிக் கொண்டு கட்சி அரசியல் நடத்தும் உங்களால் இரத்தச் சகதியில் பிணங்களோடு இன்னும் உயிருள்ள பிணங்களாய்க் கிடக்ம் எங்கள் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது. எங்கள் துயரங்களை அறிந்து கொள்ள முடியாது. எங்கள் பிரிவுகளை, எங்கள் அழிவுகளை, எங்கள் அவலங்களை எழுத்தில் தருவதும் முடியாது. புகைப்படங்களைக் காட்டி விளக்குவதற்கும் முடியாது. இதயங்களின் தவிப்பு, ஏக்கம், வெம்மை எப்படிச் சொல்லி புரிய வைப்போம்.


ஒன்றை மாத்திரம் உங்களிடம் வினயமாக முன்வைக்கிறேன். எங்களை காட்சிப் பொருளாக்கி அரசியல் நடத்தாதீர்கள். எங்களை அவமானப்-படுத்தாதீர்கள். எங்கள் தமிழக உறவுகளை ஏமாற்றாதீர்கள்.


இந்த திறந்த மடல் உங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையில்...


வன்னியில்
ஆறாவது இடம்பெயர்வுக்குப் பின்
புதுக்குடியிருப்பு வடக்கில், ஒரு பதுங்கு குழியில் இருந்தபடி...


வெற்றிகொண்டான்,
15/03/2009


"இது சாதாரண கடிதம் இல்லேப்பா. ரத்தக்கண்ணீர் கலந்த கொந்தளிப்பு கடிதம்னே சொல்லணும். இதே கொந்தளிப்பு தமிழ்நாட்டு மக்கள்கிட்ட எழுந்தா காங்கிரசுக்கு கஷ்டகாலம்தான்" என்றபடியே எழுந்தார் சுவருமுட்டி சுந்தரம். கூட்டம் கலைந்தது.
-குமுதம் முச்சந்தி

Sunday, February 22, 2009

ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

ஈழத் தமிழர் விவகாரத்தில் சோனியா மெளனம்: தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்து விலகல்

ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார்.
காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

"மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால், ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும்" என்று கூறிய அவர், "தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

Monday, February 16, 2009

சிறிலங்கா அரசின் பொய்யுரைக்கு துணை போகும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்

விடுதலைப்புலிகள் ஆயூதங்களைக் கீழே போட்டால் இலங்கை அரசை வற்புறுத்தி போரை நிறுத்தச் சொல்லலாம் -மத்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் சொல்லுகிறார்

இப்பிடித்தான் 87ல் இந்தியா அரசு விடுதலைப்புலிகளைக் கட்டாயப்படுத்தி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கச் சொன்னது. விடுதலைப்புலிகள் ஆயூதங்களை இந்தியா அரசுக்கு கொண்டு வந்து கையளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியா உளவு அமைப்பு ரா ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஆயூதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இதனை இந்தியா இராணுவ அதிகாரியாக இருந்த கர்கிரட் சிங் சொல்லி இருந்தார்.rediff.com என்ற இணையத்தளத்தில் 97ம் ஆண்டு வந்த இவரின் பேட்டியைப் பார்வையிட


Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha. Later on, all ran into trouble.

Why?

Because they did not stop arming the EPRLF [Eelam People's Revolutionary Liberation Front]. RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual standstill.

Did you tell the army headquarters that the EPRLF was being armed?

Of course.

What was the reaction?

Nothing. No reaction. [Indian army chief] General [K] Sunderji never said anything. In the army headquarters there was a core group headed by defence minister, three chiefs and a few senior officers. They used to take decisions, decisions are given to me by the staff officer. Decisions, if I question, the answer will come, These are orders from higher echelons. Higher echelons, that is the famous answer we got. Higher echelons

அத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும், மாத்தையாவையும் சுடச்சொன்னார்கள். (பிற்காலத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவரான ஜோனியை நயவஞ்சகமாக இப்படித்தான் கொன்றது காங்கிரஸ் அரசு)

What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?

Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.
http://in.rediff.com/news/2000/mar/31lanka.htm

மகிந்தா அரசு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு கிழக்கு இணைப்பினை நிராகரித்து விட்டது. அதுபற்றி சிதம்பரம் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் இந்த இணைப்பினை நிராகரிக்கும் போது கூட காங்கிரஸ் அரசு மூச்சுக்கூட விடவில்லை.

உமாமகேஸ்வரன், பாலகுமாரன், சிவசிதம்பரம் எங்கே என்று கேட்கிறார் சிதம்பரம். பாலகுமாரன் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருக்கிறார். அவர் அண்மையில் சிறிலங்காப்படையின் ஏறிகணைத்தாக்குதல்களினால் காயப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறிலங்கா இராணுவத்திற்கு காங்கிரஸ் அரசு ஆயூதங்களை வழங்கி இராணுவ உதவிகளைச் செய்து வருவது தெரிந்ததே.

'A senior leader and special member of the LTTE K.V. Balakumar was seriously injured during an attack by the Sri Lankan army at Udaiyarkattu area in Mullaithivu Monday (jan26) and is admitted to the intensive care unit,

உமாமகேஸ்வரன் இந்திய உளவுத்துறை ராவின் ஆசியுடன் நடாத்தப்படும் ஈ.என்.டி.எல்.எப் யால் கொழும்பில் கொல்லப்பட்டார்.

Uma Maheswaran was assassinated in Colombo. A PLOTE splinter group ENDLF claimed responsibility

சிவசிதம்பரம் கொடிய நோயினால் இறந்தார்.

Mr. Murugesu Sivasithambaram, President of the Tamil United Liberation Front (TULF), the main constituent of the Tamil National Alliance, passed away peacefully early Wednesday morning(05 June 2002) around two at the age of seventy-nine. The death occurred at the Colombo national hospital after a brief illness.

அண்மையில் அவுஸ்திரெலியாவிற்கு வருகை தந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள், மாணவர்களுக்கு 'விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டவர்கள்' என்ற புத்தகத்தைக் கொடுத்தார். அதில் சிறிலங்கா அரசின் இராணுவத்தினாலும், துணை இராணுவத்தினாலும் கொல்லப்பட்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களின் பெயர்களும் இடம் இருந்தன. தாங்கள் கொன்றவர்களை விடுதலைப்புலிகள் தான் கொன்றதாக சிறிலங்கா அரசு வெளிநாடுகளில் பொய்ப்பரப்புரைகள் செய்வதுண்டு. காங்கிரஸ் மந்திரிகளான காசன் அலி, இளங்கோவன், ஞானசேகரன், மணிசங்கர் அய்யர் வரிசையில் சிதம்பரமும் சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு துணை போகிறார்.

Thursday, February 12, 2009

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?

சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

- சே.பாக்கியராசன்
கீற்று

Tuesday, January 27, 2009

தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு

தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி வவுனியாவுக்கு வந்துள்ள தமிழர்களை சரமாரியாக கொன்று குவித்து வருகிறதாம் இலங்கை ராணுவம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை இதுபோல கொன்று பிணங்களை எரித்தும், புதைத்தும் வெறியாட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான தமிழ்ப் பெண்கள் ராணுவ முகாம்களில் வைத்து கற்பழிக்கப்பட்ட கொடுமையும் தங்கு தடையின்றி நடந்து வருகிறதாம்.

விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற போர்வையில், தற்போது அப்பாவித் தமிழர்களை தாறுமாறாக வேட்டையாடத் தொடங்கியிருக்கிறது இலங்கை படைகள்.

பாதுகாப்பான பிரதேசம், விடுதலைப் புலிகள் பகுதியில் உள்ள தமிழர்கள் இங்கு வர வேண்டும் என அரசு விடுத்த அழைப்பை ஏற்று அப்பாவித் தமிழர்கள் பெரும் திரளாக அரசுப் பகுதிகளுக்கு வந்தது இப்போது அவர்களுக்கு பெரும் எமனாக மாறியுள்ளது.

தந்திரமாக அவர்களை வரவழைத்து விட்டு தாறுமாறாக கொன்று குவித்து வெறியாட்டம் போடத் தொடங்கியிருக்கிறது இலங்கை ராணுவம்.




வன்னி பகுதியில் 800 அப்பாவித் தமிழர்களை ராணுவம் பீரங்கிகளால் சுட்டு மகா கொடூரமாகக் கொன்று குவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள், ஐ.நா. வரை எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில் வவுனியாவில் தஞ்சமடைந்த அப்பாவித் தமிழர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் (இவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்) கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தமிழ்ப் பெண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று ராணுவ முகாம்களில் வைத்து கற்பழித்த கொடுமையும் அங்கு நடந்து வருகிறதாம்.

இதை விடக் கொடுமை, இவ்வாறு கற்பழிக்கப்பட்ட பெண்களை மிகக் கொடூரமாகக் கொன்று அவர்களது சடலங்களை மயானத்தில் புதைத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுராதபுரம், பொலநறுவ ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்கள், காட்டுப் பகுதிகள், வவுனியாவில் உள்ள ஆளரவற்ற பகுதிகளில் தமிழர்களின் பிணங்கள்தான் பெருமளவில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவதாக சிங்களர்களே கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 25 தமிழ் இளைஞர்களும், 27 பெண்களும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர் என அனுராதபுரம் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த 1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றியபோது இப்படித்தான் தமிழர்களை வேட்டையாடியது ராணுவம். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், பெண்கள், இலங்கைப் படையினரால் கொன்று குவிக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டனர். அவர்கள் அத்தனை பேரையும் செம்மணி என்ற இடத்தில் புதைத்தது இலங்கை படை.

அப்போது யாழ்ப்பாண மாவட்ட ராணுவ அதிகாரியாக இருந்தவர் பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் செம்மணியைப் போலவே இன்னொரு வெறியாட்டத்தை ராணுவம் நடத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.



இந்த படுகொலைச் சம்பவங்கள், கற்பழிப்புகள் குறித்து இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியை, பல்வேறு தமிழர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, 800க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழர் பகுதிகளில் கதவடைப்புப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை இந்த கதவடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Thatstamil

Monday, January 26, 2009

எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?.

இப்பொழுது ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்வையிடும் பொழுது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் வன்னியில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை, விமானத்தாக்குதலினால் கொல்லப்படுபவர்கள் பற்றிய செய்திகளைக் கேட்கும் போது, படிக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. ஒவ்வொரு நாளும் 10, 20 பேர் இறக்கிறார்கள் என்று வன்னியில் இருந்து செய்திகள் வரும். ஆனால் நேற்று மட்டும் 300க்கு மேல் சிறிலங்காப் படைகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1000க்கு மேல் காயப்பட்டிருக்கிறார்கள். சிறிலங்க அரசின் மருந்துவத்தடையினால் காயப்பட்டவர்களில் பலர் உயிர்பிழைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். உலக நாடுகளில் வரும் ஊடகங்களில் சிறிலங்கா அரசின் வெற்றிச் செய்திகள் மட்டுமே வருகின்றன. தமிழர் கொல்லப்படுவது அவ்வூடகங்களில் வருவதில்லை. கொழும்பில் சிறு வெடி வெடிச்சாலும் செய்திகளை இடும் இவ்வூடகங்கள் தமிழர்கள் பகுதியில் நடைபெறும் இன அழிப்பைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.



தமிழனைக் கொல்ல சிறிலங்கா அரசுக்கு பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆயூதங்கள் வழங்குகின்றன. தமிழ் நாட்டில் உள்ள உணர்வுள்ள சகோதரர்களும், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், கவனயீர்ப்பு நிகழ்வுகள் என்று தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உலகத்தின் கண்தான் திறக்கவில்லை. இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய வேணும்?. இன்று வேலையில் இருந்து கொண்டு இதனை எழுதுகிறேன். என்னால் வேலை செய்யக்கூடிய மனோ நிலையும் இல்லை. நாங்கள் என்ன செய்ய வேணும்?. தொலைபேசியில் பலர் இன்று கதைத்து கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயலாமையை எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வரும் மக்களின் இறப்புச் செய்திகளைக் கேட்க கேட்க கவலையாக இருக்கிறது. எவ்வளவு நாள் இன்னும் நாங்கள் கவலைப் பட வேண்டும்?. எப்பொழுது எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

Wednesday, January 14, 2009

ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் கிடைத்த பரிசு

ஈழத்தமினாகப் பிறப்பது பாவமா?. மரங்களைத் தறிக்கவேண்டாம் என்று உலகம் சொல்கிறது. ஈழத்தில் அப்பாவித் தமிழர்களை கொடிய அரக்கன் இராஜபக்சா கொன்று அழிக்கிறான். இதனை உலகம் வேடிக்கை பார்க்கிறது.
ஈழத்தமிழனாகப் பிறந்ததினால் கொழும்பில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த பரிசு. 'சிங்களத் சித்ரவதைகள் கொலைகார 'வெள்ளை வேன்'! -இளகிய மனம் படைத்தவர்கள் வாசிக்க வேண்டாம்' என்ற தலைப்பில் வந்த ஆக்கத்தில் வந்த சில பகுதிகள்

''30 வயது சத்யன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நல்ல வேலையில் இருந்தார். ஒருநாள் அவர் வீட்டுக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தாங்க. தன் அடையாள அட்டையைக் காண்பித்தார் இவர். 'வழக்கமான சோதனைதான்' என்று சொல்லிவிட்டுச் சென்றது போலீஸ். அடுத்த வாரமே மீண்டும் வந்தார்கள், 'அதிகாரிகள் காத்திருக்காங்க!'ன்னு கூப்பிட்டாங்க. 'போன வாரமே விசாரணை முடிந்துவிட்டதே' என்று சத்யன் சமாளிக்கப் பார்க்க, ராணுவ உடுப்பில் இருந்த ரெண்டு பேர் உள்ளே வந்தாங்க. 'என்னமோ நடக்கப் போகுது' என்று சத்யனுக்குப் புரிஞ்சிருக்கு. உடை மாற்றிக்கொள்ளக்கூட விடாம, லுங்கி, டி-ஷர்ட்டுடன் அழைத்துப்போனாங்க. அப்போ மணி ராத்திரி 9 இருக்கும். வெளியே வந்த சத்யன் முன் பளீரெனக் காத்திருந்தது வெள்ளை வேன்!கண்ணைக் கட்டியபடி 3 மணி நேரப் பயணம். ஒரு கட்டடத்தின் முன் வேன் நிற்க, சத்யனை உள்ளே இழுத்துட்டுப் போனாங்க. அவரை நிர்வாணமாக்கி ஒரு கல்லின் மேல் உட்காரவெச்சு, அவர் கைகளைப் பின்னாடி கட்டிட்டு விசாரணை ஆரம்பிச்சது. 'சொல்லு, உனக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்?'னு முதல் கேள்வி. 'நான் கொழும்புல வேலை பார்த்துப் பிழைக்கிறவன். எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு சத்யன் பதில் சொல்ல, அந்தக் கல்லோடு சேர்த்து அவரது ஆண் குறியின் முனையை பூட்ஸ் காலால் நசுக்கினாங்க. ரெண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டு இருந்ததால், அவரால எதுவும் செய்ய முடியலை. தனக்கு எதுவும் தெரியாதுன்னு கதறிட்டே இருந்திருக்கார்.'இப்ப உனக்கு ஒரு செகண்ட் கரன்ட் ஷாக் கொடுப்போம். ரெண்டு செகண்ட் கொடுத்தா நீ செத் துடுவ'ன்னு சொல்லிட்டு, மின்சார வயரை சத்யனின் ஆண் குறியில் வெச்சிருக்காங்க. மிருதுவான அந்தப் பகுதி வழியா ஹைவோல்டேஜ் மின்சாரம் உடம்பில் ஊடுருவும் ஒவ்வொரு நொடியும் மின்சார நரகம். கரன்ட் பாய்ஞ்சு உடம்பு மொத்தமும் துடிக்கும்போது, ஒரு ரப்பர் பையை அவரது முகத்தைச் சுற்றிக் கட்டிஇருக்காங்க. அந்தப் பை முழுக்க பெட்ரோல். வலியால் வாயைத் திறந்து ஒருவன் கத்தும்போது, பெட்ரோல் வாசம் பிடிச்சா எப்படி இருக்கும்? அந்தச் சமயம் பெட்ரோல் வயித்துக்குள்ளே போவதையும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. மொத்த பெட்ரோலும் உள்ளே போயிருச்சு. அடுத்த ஒரு மணி நேரம் அவங்களுக்கு ரெஸ்ட். இவர் வேதனையில் துடிச்சிட்டு இருப்பாரு.ரெஸ்ட் முடிஞ்சு வர்றாங்க. 'சொல்லு, கொழும்புல எங்கெல்லாம் குண்டு வெச்சிருக்கீங்க?' - இது ரெண்டாவது கேள்வி. 'எனக்குத் தெரியாது'ன்னு இவர் சொல்லவும், கால்ல கயித்தைக் கட்டி தலைகீழாத் தொங்கவிட்டிருக்காங்க. லிட்டர் லிட்டரா பெட்ரோல் குடிச்சவரைத் தலைகீழாக் கட்டித் தொங்கவிட்டா எப்படி இருக்கும்? கொஞ்சம் கொஞ்சமா வாய், மூக்கு வழியா பெட்ரோல் ஒழுகுது. இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கு. அப்புறம் அவரைக் கீழே இறக்கி கை ரெண்டையும் பின்னாடி வெச்சு, ரெண்டு பெருவிரலை மட்டும் சேர்த்து கயித்துல முடிச்சுப் போட்டு மேலே தூக்கியிருக்காங்க. பின்பக்கம் கையை வளைச்சாலே வேதனை தாங்க முடியாது. ரெண்டு பெருவிரல் பலத்துல மொத்த உடம்பும் அந்தரத்துல தொங்கிட்டு இருந்தா, எப்படி இருக்கும்? உடல் கனம் தாங்க முடியாம ரெண்டு பெருவிரலும் ஒடிஞ்ச பிறகுதான், அவரைக் கீழே இறக்கியிருக்காங்க. அதுக்கு மேலயும் கஷ்டத்தைத் தாங்குற சக்தி அவர் உடம்புல இல்லை. உயிர் எங்கோ ஒளிஞ்சுட்டு இருக்குற பிணமாக் கெடந்தார்.திரும்ப வந்தவங்க ரெண்டு கையையும் கட்டி மறுபடியும் தூக்குறாங்க. அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கிற மனநிலையில்கூட அவர் இல்லை. அவரோட ஆசன வாயில் பி.வி.சி. பைப்பைத் திணிச்சிருக்காங்க. வேதனையில அலறியிருக்கார். அடுத்து இரும்பு வேலிக் கம்பியைக் கையில் எடுத்திருக்காங்க. (இதற்கு மேலான விவரங்கள் மனவலிமை கொண்டவர்களையும் நொறுங்கச் செய்யும் என்பதால், அவற்றைத் தவிர்க்கிறோம்!)இப்படி ரெண்டு ராத்திரிகளைச் சோறு தண்ணி இல்லாமக் கழிச்சிருக்கார். படுக்கவும் முடியாது உட்காரவும் முடியாது. குப்புறப் படுத்தா கரன்ட் ஷாக் கஷ்டம், நிமிர்ந்து படுத்தா வேலிக்கம்பி வேதனை. என்ன பண்ண முடியும்? ரெண்டாவது ராத்திரி அவருக்கு லேசாத் தூக்கம் வர்ற மாதிரி இருந்திருக்கு. அப்ப ஜில்லுனு ஐஸ் தண்ணியை ஊத்தியிருக்காங்க. தூக்கம் தொலைஞ்சு வேதனை வெடிச்சிருக்கு. எழுப்பி 'ஒரு நாள் ரெஸ்ட் எடு'ன்னு சொல்லி ஒரு இடத்துல வெச்சுப் பூட்டியிருக்காங்க.சவப்பெட்டி அளவுக்கான செல் அது. ஒரு ஆள் உள்ளே படுத்துக்கலாம். அசைய முடியாது, புரண்டு படுக்க முடியாது. இந்த மாதிரியான செமிட்டிக் செல் அங்கே நிறைய இருக்காம். படுத்திருக்கும் தளத்தில் கூர்மையான கல்லும் கண்ணாடித் துகள்களும் கொட்டிக்கிடக்குமாம். இந்தச் சித்ரவதையைத் தாங்கி உயிர் மிஞ்சுமா என்ன? வெள்ளை வேன்ல ஏறாததால நான் உங்க முன்னாடி பிழைச்சுக் கெடக்கேன்!'' என்று வேதனையும் விரக்தியுமாக வெதும்பினார் அவர்.இன்னமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்ரவதைகள், ஹிட்லரின் நாஜி கேம்ப் கொடுமைகளைவிடக் கொடூரமானவை. வெள்ளை வேன் பயணம் மின்சார அடுப்பில் முடிவதாக மனித உரிமை அமைப்பினர் பயமுறுத்துகிறார்கள். இதில் பெண்கள் என்றால், பாலியல்ரீதியான சித்ரவதைகளுக்கும் அதிக முனைப்பு காட்டப்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'கொழும்பில் புலிகளின் மனித வெடிகுண்டுகள் நடமாடுகின்றன, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் புலிகள் இன்னும் 'கெரில்லா' தாக்குதலை நடத்தி வருகிறார்கள்' என்பதுதான் தமிழ் இளைஞர்கள் மீதான இந்த விசாரணைகளுக்கான காரணங்கள்.காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க கடந்த ஆண்டு ஜனாதிபதியின் ஆணையக் குழு உறுப்பினர் ராஜித் சேனாரட்சணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இது போன்ற சித்ரவதைகள் நடைபெறுவதாகச் சொல்லப்படும் பூசா முகாமுக்கு ராஜித் சென்றார். அங்கு தமயந்தி என்ற பெண் தனது 6 மாதக் குழந்தையுடன் இருந்தார். 'என் வீட்டுல துப்பாக்கி இருந்ததாச் சொல்லி இங்கே அடைச்சிருக்காங்க. நான் துப்பாக்கியைப் பார்த்ததே இல்லை' என்றார். இரண்டு செல்போன் வைத்திருந்தார், அடையாள அட்டையில் கிளிநொச்சி என்று இருந்தது போன்றவை அவர் கைதுக்கான காரணங்கள். இதனால் எல்லாம்தான் உலகில் இராக்குக்கு அடுத்தபடியாக மனித உரிமைகளை மீறும் இரண்டாவது நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர்களுக்கு சிங்கள அரசு வழங்கிய தமிழ்ப் புத்தாண்டுப் பரிசு